பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

- சேக்கிழார்



       நிகழ்ந்த தன்மையில் நிலவுமேதும் கடல்நீர்மை குன்ற 
       வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்" 
                                          சம்பந்தர் புராணம், செ.384

உடல்நூற் புலமை:"மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக் கட்டை கிடைக்காமற்போகவே, அவர் சந்தனக்கல் மீது தம் முழங்கையைத் தேய்த்தார். அதனால் புறந்தோல், நரம்பு எலும்பு கரைந்து தேய்ந்தன என்று சேக்கிழார் கூறல் கூர்ந்து நோக்கத் தக்கது. “உள்ளே நின்ற எலும்பு, நரம்பு. தசை இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மேலே கட்டிய புறந்தோல் முதலில் தேய்ந்தது. அதனை அடுத்து நரம்பு தேய்ந்தது. பின் எலும்பும் தேய்ந்தது என்பது இதன் பொருள். இம்முறை வைப்பு உடல் நூலுக்கு இயைந்ததே. யாகும்.'

1. "நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
          முட்டும்பரி சாயினுத் தேய்க்குங்கை முட்டா தென்று . 
          வட்டத்திகம் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார். 
          கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய" 
2. "கல்வின்புறத் தேய்த்த முழங்கை சலுத்து சோரி
          செல்லும்பரப் பெங்கனும் என்பு திறந்து மூளை 
          புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார் 
          அல்வின்கண் எழுத்த்து வந்தருள் செய்த வாக்கு”
                                            மூர்த்தீயார் புராணம் .செ.20-21
மருத்துவக்கலை.சேக்கிழார் மேற்கூறிய கலைகளிற் புலமை பெற்றாற் போலவே மருத்துவக் கலையிலும் திப்பியப் புலமை சான்றவராக இருந்தனர் என்பது தெரிகிறது. சேக்கிழார், இக்காலத்துச் சிறந்த, மருத்துவ நிபுணர் ஆராய்ந்து வியந்து பாராட்டத்தக்க முறையில் மருத்துவக் கலைநுட்பங்களை ஆங்காங்கு விளக்கியுள்ளார்.

, 3 C.K.S. Mudaliyar - Periyapuranam, Vol II pp. 1276-77