பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140. -

சேக்கிழார்



அதிகரித்தல், பெருமூச்சு விடல், விக்குள் உண்டாதல் முதலிய துன்ப நிலைகள் இந்நோயினால் தோன்றும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. "

சூலை நோயினால் வருந்திய அப்பர்க்கு இத்துன்பங்கள் உண்டாயின என்பது அவருடைய வாக்காலும சேக்கிழார் வாக்காலும் அறியலாம். .

அப்பர் வாக்கு:

          (1) தோற்றாதென் வயிற்றி னகம்படியே
              குடரோடு துடக்கி முடக்கியிட
              ஆற்றேன் 
          (2) வலிக்கின்றது ஆலை தவிர்த்தருளிர்          
              பயத்தேயென் வயற்றி கைம்படியே 
              பறித்துப்புரட் டியறுத் திடதான் 
              அயர்த்தேன்.  
          (3) “கவித்தேயென் வயிற்றி னகம்படியே
               கலக்கிமல்கி கிட்டுக் கவர்ந்துதின்ன 
               அலுத்தேன்.” . 
          (4) "வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுத்தால்
               என்வேதனை யான விலக்கியிடாய். ” 
சேக்கிழார் வாக்கு:
           (1) "கடுங்கனல்போல் அடுங்கொடிய
               மண்டுபெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால். 
           (2) "அடைவலமண் புரிதரும சேனாவயிற் றடையும் அது
               வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பயிறவுமாம் 
               கொடியலைாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடை 
               படருமுந்து நடுங்கிஅமண் பாழியறையிடைவிழுந்தார்."
  இதன் விவரம் மாதவ நிதானம், வைத்ய சார சங்கிரகம் போன்ற

மருத்துவ நூல்களிற் காணலாம். -