பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

- சேக்கிழார்

வாழ்த்தையே காண்க. - .

         'உலகெ லாமுணர்த் தோதற் கரியவன் 
          திலவு லாவகிய நீர்மவி வேனியன் 
          அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 
          மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ** - 
2. சேக்கிழாருடைய பெரும்பாலான பாடல் வரிகள் நிறுத்தக்குறிகள் பெய்யப்படின், எளிய தனித்தனி வாக்கியங்களாக அமைதலைக் காணலாம்.
         "சன்னியால் வணங்கிநின்ற தொண்டரைச் செயிர்த்து  
                                                     (நோக்கி, 
          தன் இது மொழிந்த வாநீ யான்வைத்த மண்ணோடன்றிப் 
          பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொன்ளேன்.
                                                     (போற்ற 
          என்னை நான் வைத்த ஒடே கொண்டுவா’ என்றான்
                                                    (முன்னோன்.”  
                                           திருநீலகண்ட புராணம். 24
3. பாக்களில் சொற்சிதைவு நேர்தல் பெரும்பாலும் தடுக்கப்படல் வேண்டும்’ என்பது இன்றைய தமிழ்ப் புலவர் கொள்கை. இதனைச் சேக்கிழார் அக்காலத்திற் தானே கொண்டிருந்தவர் என்பதை அவர் பாக்கள் சிலவற்றால் அறியலாம்.
          "அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வனங்கி
                                                 (அருள்முன் பெற்றுப்
           பொய்ப்பறவிப் பரிணி ஒட்டும் திருவிதி புரண்டுவலம்
                                                 (கொண்டு போந்தே 
           எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை
                                                 (இறைஞ்சி ஏத்திச் 
           செப்பரிய பெருமையினார் திருநாரை பூர் பணிந்து பாடிச்  
                                                          (செல்வார்”
                                                      
                                                            அப்பர் புராணம் - 179 
4. அவ்வத் தலத்தைப் பற்றிக் கூறுகையில் அத்தலத்