பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 75

பெற்றான். அவன் மகனான பராந்தகக் சோழன் அளப்பரிய சிவப்பணிகள் செய்தான் கூத்தப் பெருமான் அம்பலத்தைப் பொன்மயமாக்கினான். உலகப் புகழ்பெற்ற இராசராசன் செய்த சைவப் பணிகள் அளவிடற் கரியன. நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்தியவன் அப்பெருமகன் அல்லனோ? சிறப்புடைய நாயன்மார் உருவச்சிலைகளை எழுப்பி அவற்றுக்குப் பூசை, விழாக்கள் குறைவற நடக்க ஏற்பாடு செய்தவன் அப்பெருந்தகை அல்லனோ? அவன் மகனான பெருவீரன் இராசேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சரம் வியத்தகு பெருங்கோவில் அல்லவா? தேவார நாயகம் என்ற தேவாரத் திருமுறைகளை வளம்பெற வளர்த்த பேரரசன் இராசேந்திரன் எனின், அவனது சைவச் சமயப் பற்றை என்னெனக் கூறி வியப்பது!

சோழ - சாளுக்கிய மரபில் வந்த முதல் குலோத்துங்கன் பெரிய சிவபக்தன். இவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்புப் பெற்றவன் தில்லைக் கூத்தப்பிரானைத் தன் குலநாயகமாகக் கொண்டவன். அவன் மகனான விக்கிரம சோழன் அவனினும் சிறந்த சிவபக்தன். அவன் கூத்தப்பிரான் கோவில் முழுவதையும் பொன்மயமாக்க முயன்றவன் சிதம்பரம் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தவன்.

அவனது அமைச்சனும் தானைத்தலைவனுமான நரலோக வீரன் சிதம்பரத்திலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் எண்ணிறந்தன. பாராட்டத்தக்கன வியக்கத் தக்கன.

சோழ மாதேவியர் செய்த சைவத் திருப்பணிகள் தாம் எண்ணத் தொலையுமோ? கண்டராதித்தரது மனைவியாரும் இராசராசன் பாட்டியாருமாகிய