பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சேரன் செங்குட்டுவன்

பீடா ருறந்தையும் - ஒலிபுனற் புகாருங் கலிகெழுவஞ்சியும்” [1] எனச் சோணாடு தங்காலத்தில் இரண்டு இராஜதானிக் ளுடையதாயிருந்ததை இளங்கோவடிகளும் குறிப்பிடுவர். [2] செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மானும் சோழன் மணக் கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டு வந்தனன். [3] இவ்வுறையூர்ச் சோழர்க்கும் புகார்ச் சோழர்க்கும் பெரும்பகை மூண்டு போர் நிகழ்ந்து வந்ததாகப் புறநானூற்றால் அறியப்படுகின்றது. புகார்ச்சோழரென்பவர், கரிகாலன் மகனாகக் கருதப்படும் கிள்ளிவளவனும் [4] அவன் தம்பியாகிய நலங்கிள்ளியுமாவர். இவருடன் காரியாற்றங் கரையில் நடந்த போரிலே, செங்குட்டுவனம்மானாகிய நெடுங்கிள்ளி இறந்தான் என்பது, ‘காரியாற்றுத் துஞ்சிய‘’ என அவன் விசேடிக்கப் படுதலாலும் [5] அப்போரில் கிள்ளி வளவன் தம்பியே வெற்றி பெற்றவனென்பது, '“ஆர்புனை தெரிய லிளங்கோன் றன்னால், காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை, வலி கெழு தடக்கை மாவண் கிள்ளி” எனச் சாத்தனார் மணிமேகலையிற் கிள்ளிவளவனைக் கூறுதலாலும் [6] புலப்படுகின்றன. செங்குட்டுவன் அம்மானாகிய நெடுங்கிள்ளி இங்ஙன மிறந்ததும், அவன் மகனான பெருங்கிள்ளி உறையூரிற் பட்ட மெய்தினன். திருக்கோவலூர்ச் சிற்றரசனும் பெருவீரனுமாகிய மலையமான் திருமுடிக்காரி [7] என்பவன் உறையூர்ச் சோழர்க்கு

  1. சிலப்பதி. 8:3-4..
  2. கரிகாற் பெருவளத்தான், உறையூரை நீங்கிப் புகாரைத் தன் தலைநகராகக் கொண்டானென்று (பட்டினப் பாலை (அடி - 285.) குறிப்பிக்கும்.
  3. புறம். 44, 45, 47-ம் பாடல்கள் காண்க.
  4. இவனே, மணிமேகலையிற்கண்ட சோழன்.
  5. புறம் 47
  6. மணி, 18: 126-28
  7. இவனே கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய காரி.