பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரவமிசத்தோர்

15


வைத்து, இடையிற் செங்குட்டுவனைப் பற்றியதை அமைத்திருக்கின்றார். இதனால், நார்முடிச்சேரல் செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாகவும், அவன் தம்பி சிறிது பிற்பட்டவனாகவுங்கருத இடமுண்டாகின்றது. காலமுறையில் வைத்தே, பதிற்றுப்பத்துத் தொகுக்கப்பட்டிருத்தலை அதனுட்கண்ட பதிகங்களாலும் வாக்கியங்களாலும் உய்த்துணரலாகும்.

சேரன் செங்குட்டுவனது 5-ம் பதிகத்தால் அவன் தாய்ப்பாட்டனாகத் தெரியும் மணக்கிள்ளி, உறையூரிலிருந்தாட்சிபுரிந்த சோழனாவன். செங்குட்டுவன் மாற்றாந்தாயைப் பெற்றவனாக 4, 6-ம் பதிகங்கள் கூறும் வேளாவிக்கோமான் பதுமன் என்பவன் பொதினிமலைக்குரிய[1] ஆவியர்குலத்தோன்றல். இவ்வேளாவியின் பெயரால் வஞ்சியின் புறத்தே ஒரு மாளிகை அமைக்கப்பட்டிருந்ததென்று தெரிகின்றது.[2]


சேரரின் மற்றொரு கிளையினர்.

இனி, பதிற்றுப்பத்தின் இறுதி மூன்று பத்துக்களாற் புகழப்பட்ட அரசர், சோமரபின் மற்றொரு கிளையினராகத் தோற்றுகின்றனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் இம்மரபின் தலைவன் என்பதும், இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதனென்பதும் 6-ம்பத்துப்பதிகத்தால் அறியப்படும். இவ்வந்துவஞ்சேரல், முடித்தலைக்கோப் பெருநற்-

  1. பொதினி என்பது பழனியின் பழைய பெயர். இவ்வாவியர் இதனையாண்டமைபற்றியே, இஃது ஆவி நன்குடி என வழங்கப்பெற் றது. இவ்வாவியர்குடியில் உதித்தவருள், வள்ளலான பெரும் பேகனும் ஒருவன். (யாமெழுதிய வேளிர் வரலாறு பார்க்க.)
  2. சிலப்பதிகாரம். 28: 196-8; புறநானூறு. 13.