பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை கினால் சாரா.! நாற்றமும் அடிக்கும். இந்த ஒரு வருஷ வாழ்க்கை அவனை எப்படி யெல்லாமோ மாற்றியிருந்தது. 42. ஸ்துச் சாப்பாடான 'டாலும்' 'ஆட்டா' ரொட்டியும் “கோவும், அவன் உடம்பிலே புதுமெருகும் மினுக்கும் வலிவும் ஊட்டியிருந்தன. மேலும், வாரா வாரம் ஹவில்தார் மேஜரிடம் அவுட் பால் வாங்கிக்கொண்டு நாசிக்குக்குச் செல்வான்; “அண்ணா ! ஆவ் ஜி இதர்!” என்று அருமையாய் ஒரே ஒரு தமிழ் வார்த்தைப் பிரயோகத்தோடு அழைக்கும் மராத்திய விபசாரிகளிடமும் அவன் சுகங் கண்டு பழகியிருக் -திருன். - . :

  • இத்யாதி அனுபவங்களோடு பசை போட்டுத் தேய்த்து

வி: ஐப்பே ஜி திற்கும் காக்கிச் சட்டைப் பையில் அழுக்கைப்பும் மடிப்பையும் அறியாத புது ரூபாய் நோட்டுகள் சர சர்க்க அவன் பிறந்த ஊரில் ஒரு மாச காலம் மஜா பண்ண வந்திருந் தான். மிலிட்டரியிலிருந்து வந்தும் அவன் தனது படா பூட்டுகளையும், காக்கிச் சட்டையையும் கழற்றவில்லை. அந்த உடையிலே திரிவதில் அவனுக்கு ஒரு தனிக் கெளரதை, அன்றும் அவன் அப்படித்தான் தன்னுடைய கூட்டாளி ஒருவனுடன் சாலைக்கரையான் சாராயக் கடையில் 'அமுத 8.ானம் பண்ணிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். ராமசாமி வாந்தியெடுத்த பின் அவனுடைய தோழன் அவனைத் தூக்கி நிறுத்திப் பக்கத்திலுள்ள வாய்க்கால் பாகத்தருகே நடத்திச் சென்று உட்கார வைத்தான். சரக்கு வெளியேறிவிட்டதால் போதை ஓரளவு தெளிந்திருந்தது. ஒன்றும் பேசாமல் வாயில் கூடிவரும் எச்சிலைக் காறித் சப்பிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழிபாங் லஷ்மி கூடையை இடையில் வைத்துக் கொண்டு , - பரக்கப் பரக்க அவர்களைக் கடந்து சென்றாள். அவள் செல்வதை ராமசாமி கண்டுவிட்டான். களத்திருந்த கண்களைக் கொட்டக் கொட்டத் திறந்து கொண்டு, பக்கத்திலிருந்த நண்பனைக் கேட்டான்;