பக்கம்:சைவ சமயம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சித்தாந்த சாத்திரங்கள்

வினைப்பயன் வரும் வழிகள், மாயையின் பிரிவுகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பல சமயத்தாரின் முத்தி பேதங்கள் வகுத்துக்கூறி, அவற்றிற்கு மேல தாய்ச் சித்தாந்த முத்தி விளங்கும் முறைமை உணர்த்தப்பட்டுள்ளது. 2. திருவருட்பயன்

இது குறள் வெண்பாக்களால் ஆயது; பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வோர் அதிகாரத் தும் பத்துக் குறள்கள் உண்டு. இறைவனது இயல்பு கூறும் முதல் அதிகாரம் பதிமுதுநிலை என்னும் பெயருடையது. ஏனை அதிகாரங்களின் பெயரும் இவ்வாறே அவை கூறும் பொருளின் இயல்பை விளக்குவன. அவை உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, ஐந் தெழுத்தருள்நிலை, அணைந்தோர் தன்மை என்பன. 3. விஞ வெண்பா

இது பதின்மூன்று பாக்களால் ஆகியது. இஃது, ஆசிரியர், தம் குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் சாத்திர உண்மைகளைக் கேட்டுத் தெளியும் முறையில் அமைந்தது. இருளும் ஒளியும் ஓரிடத்தில் கூடல் அரிது என விதந்து, தன்பால் இறைவன் நின்ற வியப்பை அறிவிக்கும் பாடலும், காண்டான்.காட்சி-காட்டப்படும் பொருள் என்னும் மூவகை உணர்ச்யை நீத்தவர் முத்தி நிலையை அடைவர் எனக் குறிக்கும் திருப்பாட்டும் நுட்பம் செறிந்தவை. 4. போற்றிப் பஃருெடை வெண்பா

இது, உயிர் தொழிற்படும் முறைமை உணர்த் தும் வாயிலாகத் தமக்குச் சிவஞானம் நல்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/129&oldid=678271" இலிருந்து மீள்விக்கப்பட்டது