10 தமிழகத்துக் கோவில்கள்
(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழர் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆயின், அவை மண், மரம் முதலியவற்ருலாகி அழியத்தக்கன.'
(3) இங்ங்னம் அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான். '
தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆயது. அங்கங்கு இணைப் புக்காக ஆணிகள் முதலியன பயன்பட்டன. இங் ங்னம் அமைந்த கோவில்களே அவை. இத்தகைய கோவில்களை இன்றும் மலையாள நாட்டிற் காண லாம். இங்ங்ணம் கோவில்களை அமைப்பதில் தமி ழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி. பி. 7-ஆம் நூற்ருண்டிலிருந்து பல கோவில்கள் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய்விடும். " " விமானங்கள்- 'துயது, கலப்பு, பெருங் கலப்பு என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில் ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் தூய விமானம் எனப்படும்; இரண் டைக்கொண்டு அமைவது கலப்பு விமானம் எனப்படும் ; பல பொருள்களால் அமைவது பெருங் கலப்பு விமானம் ஆகும், " " என்பது கட்டடக்கலை நூல் கூற்ருகும். இதலுைம், பண் 1. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங் கோவிலுள் இருக்கிறது. அதன் அற்புத வேலைப்பாடு வியக்கத்தக்கது. 2. Longhurst - "The Pallava Architecture', Part 1, pp.
22—23. 3. R. Gopinatha Rao- 'Epièaphia Indica”, Vol.15, P15 4. Ramraz-'Essay on lndian Architecture,' PP48-49.