w
சைவசமயம் 95
2. அசுத்த சைவர் கா தி ல் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; ருத்திராட்ச மாலையை அணிவர்; சரியை, கிரியை வழி நிற்பர்: உபதேசம் பெற்று மந்திரங்களைச் செபித்துக் கொண்டிருப்பர்,
3. மார்க்க சைவர் காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; புறவேடத்திற்கு மிகுந்த மதிப்புத்தாரார்; ஞானத்தையே, சிறப்பா கக் கருதுவர்; வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தப் பாதையிற் சென்று ஜீவன் முக்தராவர். -
4. கடுஞ்சுத்த சைவர் என்பவர் சைவர்க் குரிய வெளி வேடங்களில் கவனம் செலுத்தார்; நேரே சிவனிடம் சென்று தங்கள் பாசத்தையும் பசுத்வத்தையும் ஒழித்துச் சிவஞானத்தை அடை வர். அவர்கள் சுத்த சைவர்க்குரிய சமயப்படிகளிற் செல்லார்; அவர்கள் 'நான்', 'அவன் என்ற வேறுபாடு அற்றவர்கள்; சொல்லரிய தத்துவத்தை அடைந்து இந்திரியங்களை அடக்கியவர்கள். அவர் கள் பரசாயுத்யத்தை அடைந்தவர்கள். கண்ணப் பர். சாக்கியர் போன்ற நாயன்மார்கள் பலர் இவ்
வகுப்பைச் சேர்ந்தவராவர். அவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளைக்
கடந்தவர்கள்; புறவேடம் அற்றவர்கள். கடுஞ் சுத்த சைவம் சிவஞான போதம் முதலிய பின்னூல் களில் கூறப்படாமை காணத்தக்கது. கடுஞ்சுத்த சைவருடைய இலக்கணங்களைத் திருமூலர் கூறி யிராவிடில், நாயன்மார் பலருடைய செயல்கள் பித்தர் செயல்களாகக் காணப்பட்டிருக்கும்; விளக்க மும் மதிப்பும் பெற்றிரா , நாம் வேறு எந்த நூலைக் கொண்டும் உண்மை அறிந்திருக்க முடியாது.