குறைவு
கேவலம்
குறைவு- தாழ்வு. ஒ.அதிகம்.
குன்றா - குறையா எ-டு குன்றா
அறுபுள்ளி.
கூ
கூசிப்பின் - நாணின், எ-டு கூசிப்பின் கொள்ளார் நல்லோர் (சிசிப ப 295)
கூசிப்பு - நாணுதல்.
கூசுதல் - அவருயர்வும் தன் இழிவும் நோக்கி நிகழ்வது.
கூத்தன் - நடராசன், சீவான்மா.
கூடத்தகாதவர் - இகல் பேசும் உலகாயதர். மருள் உள்ள மாயாவாதி, பொறை பேசும் புத்தன், வஞ்ச அமணர், வேதம் அறியா வேதியர், செற்றபுலையர், மெய்ஞ்ஞானம் இல்லா மூடர், அரன் பழிப்போர்.
கூடல் - புணர்ச்சி.
கூடலார் - கூடுவோர்.அகன்பதியால் ஒரு வகையினர்.
கூட்டரவு - கூட்டம்.
கூட்டில் - ஆன்மாவில்.
கூடு - உடம்பு, ஆன்மா,எ-டு கூட்டில் வாள் சாத்தி நின்று உந்தி பெற. (திஉ30)
கூத்தாட்டு - நடிப்பு, திருவிளையாடல்.
கூர்மன் - 10 வளிகளில் ஒன்று.
கூரியர் - குசலராய் உள்ள பிரமா திகள் எ-டு கூரியவராய் உள்ள வர்கள் ஒத ஒதித் (சிசிபப 128).
கூலம் எட்டு - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்.
கூலம் பதினாறு - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு,பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை
கூவல் - கிணறு, நீர்நிலைகளில் ஒன்று. எ-டு கூவல் ஆழி குளம் சிறு குழிகால் (சநி3).
கூவல் நீர் - கிணற்றுநீர், எடு கூவல் நீர் என்னில் கொள்ளோம் (சி சிபப 184).
கூற்றம் - எமன்.
கூற்றுவ நாயனார் - குறுநில மன்னர் களந்தை - சோழநாடு. தில்லை கூத்த பெருமானால் அவர்தம் திருவடிகளையே திருமுடியாகச் சூட்டப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
கெ
கெட்டார் - இறப்பு பிறப்பு இல்லாதவர்.
கே
கேசரம் - பூத்தாது, நாக்கு, உளை.
கேடு - குற்றம் எ-டு கேடில் புகழ்தரும் சரியை கிரியா யோகம் ( சிபி 49)
கேட்டல் - உண்மைஞானம் நான்கில் ஒன்று. குருமூலமாக ஆகமப் பொருளைச் செவிமடுத்தல்.
கேண்மதி - கேட்பாயாக.
கேண்மை - நட்பு. எ-டு.கேண்மையரேல் இவை உணர்த்தக் கிளக்கும் நூலே (சிபி 49)கேண்மைப் பதிப்பாசிரியர்.
கேதம் - துக்கம்.
கேத்திரிகன் - ஆன்மா.
கேது - 9 கோள்களில் ஒன்று.
கேவலம் - தனிமை. அதாவது, கருவிகளோடு ஆன்மா கூடாத நிலை. இது ஆணவம் மட்டும் இருக்கும் நிலை, காரண அவத்தை 3 இல் ஒன்று. தன்னியல்பு உடையது. 2) அருள் நிலை.
97