செழும்புனல்
சேரமான் பெருமாள் நாயனார்
செழும்புனல் - ஆற்று வெள்ளநீர்,
செழுகிரி - மலை.
செழுநவை அறுவை -மெல்லிய அழுக்குடை ஆடை. .
சௌபல்யம் - எளிமை.
செற்பை - வாத உத்திகளில் ஒன்று, மற்ற மூன்று வாதம், விதண்டை ஏது. பிறர் விருப்பம் நீக்கித் தன் நோக்கம் தோன் றாமல் வாதிடல்,
செற்ற - வெறுத்தற்குரிய
செறிந்தறிதல் - அழுத்தியறிதல்
சென்ற நெறி - ஐம்பொறி வழிச்செல்லுதல்,
சென்னி - 1) மண்டை முனை 2} தலைமேல். எ-டு சென்னி வைப்பாம்.
செனிப்பு - உண்டாதல்.
சே
சேகரம் - அழகு. ஈசுவரனோடு கூடியது.
சேகர சாங்கியம் - யோக மதம். கடவுள் உண்டு என்னுங் கொள்கை.
சேக்கிழார் --முப்புராணங்களில் சிறப்புப் புராணமான பெரிய புராண ஆசிரியர், உரிய பெயர் திருத்தொண்டர் புராணம், 12ஆம் திருமுறை
சேசுவர சாங்கியன் - கடவுள் உண்மையை ஒப்புக்கொள்ளும் சாங்கியமதவாதி.
சேடம் சேடியா பாவகம்- அடிமையும் முதல்வனும் என்று எண்ணும் பாவனை, அதாவது, ஆண்டான் அடிமைத் திறம்
சேடம் - அடிமை, குறை
சேடன் - அடிமை, தோழன், பாங்கன், சிவனுக்கு ஆன்மா சேடன் ஆகும்.
சேடாசேடிய பாவகம் - அடிமை யும் முதல்வனும் என்னும் பாவனை.
சேட்டிதன் - காரணன், சிவன், எ-டு சித்துடன் அசத்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலால் (சிசிசுப 76)
சேட்டித்தல் - தொழிற்படுதல்
சேட்டை - தொழில், குறும்பு. எ-டு உலகின்தன் சேட்டை (சிசிசுப 236).
சேடி- தோழி, பாங்கி.
சேணில் - அந்தி வானில்
சேதனன் - அழிப்பவன்.
சேதனம் - அறிவுடைப்பொருள். நுண்பொருள் ஒ. அசேதனம்.
சேதனப்பிரபஞ்சம்-- அறிவுலகம். அறிவுடை உலகம். ஒ. அசே தனப் பிரபஞ்சம்.
சேதிப்ப - வெட்ட. எ-டு தாளிரண்டும் சேதிப்ப
சேதிராயர் - 9 ஆம் திருமுறை பாடிய 9 பேர்களில் ஒருவர்.
சேந்தனார் -1) இறைவன் 219 ஆம் திருமுறை பாடிய 9 பேரில் ஒருவர்,
சேந்தினார் செயல் - பா அவிழ
சேய்மை - தொலைவு,
சேரல் - அடைதல்
சேரமான் பெருமாள் நாயனார் - 11ஆம் திருமுறையில் பொன் வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கை லாய ஞான உலா ஆகிய மூன்றையும் பாடியவர், பா, கழறிற்றறிவார் நாயனார்.