பெளத்தர் கொள்கை
மங்கலம்
உலகப் பற்று அறும். அப்பற்று அறுதலே வீடுபேறு என்னும் மையக்கருத்துடையது.மற்றும் உலகம் உள்ளது அன்று; இல்லதும் அன்று. இப்பொருள் தானே தோன்றி அழியும். இதற்கொரு கர்த்தா தேவை இல்லை என்று இம்மதம் கூறும். பா. புத்த உபதேசிகள்.
பெளத்தர் கொள்கை - திருந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்யென்று ஏற்க முடியாது என்பது இது அறிவின் ஏற்புடைமை.பா.பெளத்தம்.
பெளத்தன் - புத்த சமயத்தான்.
பெளதிக பாவனை- கடவுளை உருவனாகத் தியானித்தல்.
பெளதிகம், பவுதிகம் -1) பூதச்செயல் 2) பூத நூல். இது தற்பொழுது இயற்பியல் எனப்படும்.
பெளதிகத் தீக்கை- உலோக தருமிணி.
பெளராணிகம் - புராணத்தைப் பின் பற்றும் சமயம்.
பெளராணிகர் - உயிர் உருவமுடையது என்னுங் கொள்கை யினர்.
ம
ம- சிவன்.
மகரம் - மனம் பாமனம்.
மகவு - பிள்ளை.
மகாகாயம் - பெருவெளி.
மகாசகலம் - மத்தியாலவத்தை
ஆன்ம நிலையைச் சார்ந்தது.
மகாசனப் பரிக்கிரமம்-பொது மக்கள் ஒப்புதல்.
மகாசைவம் - சைவம் 16இல் ஒன்று. விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடை வளர்த்துச் சிவனைச் சற்குணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டும் என்று கூறும் சைவம்.
மகா சைவன் - சிவதீக்கை பெற்றவன்.
மகாரம் - பா. மகரம்.
மகாமுத்திரை - திரிசூல முத்திரையில் தர்ச்சனியை அநாமி கை வளைப்பதாகக் காட்டும் முத்திரை.
மகா ருத்திரன்-பரமசிவன்.
மகாவிரதம்-1) சைவ சமயத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்றான மாவிரதம். 2) சைன விரத வகை.
மகாவாக்கியம் -பெரும் பெயர். அஞ்செழுத்து.பா.தத்துவமசி
மகிமா -8 சித்திகளில் ஒன்று. எல்லா இடங்களிலும் ஒரே காலத்தில் காணப்படுதல்.
மகுடசூளாமணி - திருமுடி மாணிக்கம். எ-டு இறைவன் மகுடசூளாமணியாய் வையம் போற்ற.(சிசிபப2).
மகேச்வரானந்தர் -காச்மீர கெளலசம்பிரதாயத்தினரின் முன்னவர்.
மகேசை - சிவசத்தி.
மகேசுரம் -அறிவு குறைந்து வினை மிகுந்தது.
மகேசுரமூர்த்தி - சந்திரசேகர், உமா மகேசர், இடாபாரூபர் முதலிய 25 கேவல வடிவம்.
மகேசுரர் - பரம் பொருள்.
மகேசுர வடிவம் - இலிங்க வடிவம் ஒத்த சிவமூர்த்தம்.
மங்கலம்-சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு கொடி, இணைக்கயல் என 8.
208