கண்ணழித்தல்
கமர்
கண்ணழித்தல் - கூறிடல்.
கண்ணாம் - அறிவாம்.
கண்ணி - கருதி.
கண்ணிய - அறிவதாகிய.
கண்ணன் - திருமால்.
கண்டு - 1. படைத்து 2 பட்டறிவிலிருந்து அறிந்து.
கண்டுணர்தல்-ஆராய்ந்தறிதல்.
கண்ணுதல் - கருதுதல்.
கண்படல் - உறங்கல்,கனவிலா-உறக்கம்.
கண்பேறு - கண்ணின் சிறப்பு, மெய், வாய், மூக்கு, செவி ஆகிய நான்கும் தம்மிடம் வந்த பொருள்களை மட்டும் பற்றும்.ஆனால் கண்ணோ பொருள்களைச் சென்றும் நின்றும் அறிவது. உயிர் உணர்வோடு விரவியும் நிற்பது. இதுவே அதன் பேறு.
கண் வாசகம் - திருநோக்கு, பரிசம், வாக்கு எனப்படும் தீக்கை.
கண்ணார் - குருடர்.
கண்வலை -கவர்ச்சி வலை.
கணிதம்-நாராயணியம், வாராகம் முதலியவை.
கணிதர் - கணிப்பவர். எ-டு கடி வின்றியே கணிதர் (சிசிபப 199)
கணித்தல்-மானதமாகச் செய்தல்
கணை - வில்.
கத்தும் சமயக்கணக்கு - புற சமயத்தவர் கூறும் புன்மைக் கோவை,
கதம் - சீற்றம்
கதம் என- 'சட்டென.
கதி - 1. நிலை, தேவகதி, மக்கள் க்தி, விலங்கின் கதி நரகதி என நான்கு வகை 2 பிறப்பு 3 ஞா னம் (வீடுபேறு)
கதிர் - ஞாயிறு, ஒளி,
கதிர்வாள் - கருக்கரிவாள்.
கந்தம் - 1 நாற்றம் : ஐம்புலன் களில் ஒன்று 2 கிழங்கு கந்தம் மூலம் புசித்தல் 3.கந்தம் பூசுதல்: வழிபாட்டு முறைகளில் ஒன்று. கந்தம் ஐந்து - பா. ஐந்து கந்தம்.
கந்த புராணம் - முருகன் புகழ் புகல்வது. அரும்பெரும் புராணம் 3 இல் ஒன்று. பொதுப் புராணம் 18 இல் ஒன்று.
கந்தழி-ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகத்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். தொல் காப்பியத்தில் கூறப்பெறுவது.
கந்தரம்-கழுத்து. எடுகந்தரத்து அமைந்த அந்த இல் கடவுள் (சநி 2).
கந்தித்தல் - நாறுதல்
கப்பு - கவர்ச்சி.
கபிலதேவ நாயனார் - 11 ஆம் திருமுறையில் பின்வரும் நூல்களை அருளியவர்: 1. மூத்த நாயனார் திரு இரட்டைமணி மாலை 2. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை 3. சிவ பெருமான் திருவந்தாதி இத்திருமுறை நூல்கள் 40 ஐ இயற் றியவர்கள் 12 பேர்.
கபிலர் - உருத்திரர்.
கபிலன் - சாங்கிய மதாச்சாரியன் எ-டு இவ்வுரை கபிலன் சொல் ஆகுமது (சிசி பட 195).
கமலம் - தாமரை
கமலன் தாள் - பிரமன் திருவடி கமல முனிவர் - 18 சித்தர்களில்ஒருவர்.
கமர் - வயல்வெடிப்பு. வயல் வெடிப்பில் சிந்திய செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு என்