பக்கம்:சொன்னார்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


ஒவ்வொரு வரும் ஏதாவது ஓர் அந்தரங்க சுயநல நோக்குடன் சட்டசபைக்கு வருகின்றனர். எனக்கு அவ்வித நோக்கு ஒன்றுமில்லை; அதனால் நான் சட்டசபையில் மீண்டும் புகவும் விரும்பவில்லை. -

மகாகவி இக்பால் (1926)


பிலிம் தொழிலை ஏகபோகமாகப் பிடித்துக் கொள்ள நான் முயற்சிப்பதாக ஆங்காங்கு வதந்தி உலவுகிறது. அது உண்மையன்று; எந்தத் தனி மனிதனும் எந்தத் தொழிலையும் ஏகபோகமாக்கிக் கொள்வதென்பது முடியவே முடியாது. தென்னிந்தியாவில் ஒரு ஸ்டுடியோ உண்டாக்குவதன் நோக்கம், இங்கு ஒன்றுபட்ட சினிமாத் தொழில்-கலை வளர்வதற்காகத்தான். வடநாட்டிலுள்ள ஸ்டுடியோக்களைக் காட்டிலும், படமுதலாளிகளுக்குச் சிறந்த செளகரியங்களைச் செய்து கொடுப்பதுதான் என் நோக்கம். இந்த எண்ணத்தைக் கொண்டே டைரக்டர் கே. சுப்பிரமணியம் உண்டாக்கிய எம். பி. பி. வி. ஸ்டுடியோவைப் பல மாறுதல்களோடு ஜெமினி ஸ்டுடியோவாக நான் நிறுவி இருக்கிறேன்.

ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் (23-7-1941)


நான் பள்ளியில் படித்த காலம் மிகச் சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருடமும் பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக்கூடத்தில் 2 வருஷமுந்தான் படித்தவன். எனக்குக் படிப்பே வராது என்று என் பெற்றாேர் முடிவு கட்டிவிட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாயிருந்ததாகவும் ஆதலால், என்னைப் பள்ளியில் பகல் எல்லாம் பிடித்து வைத்திருந்து, இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது என்பதுதான்.

—பெரியார் (21-7-1939)

(கோவை அரசினர் கல்லூரி தமிழ்க்கழக மாணவர்

சங்கக் கூட்டத்தில்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/58&oldid=1014007" இலிருந்து மீள்விக்கப்பட்டது