பக்கம்:சொன்னார்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88


சகல சம்பத்தையும் உடையவனுக்குச் சம்பந்தன்னனென்றே பேர். பிரபுவென்ற பேரில்லை. வித்தையை உடையவனுக்கு வித்துவானென்றே பேர். விவேகியென்ற பேரில்லே. கொடுக்கும் தகைமை உடையவர்கட்கே தாதாவென்றும், பிரபுவென்றும், வள்ளவென்றும் பேர்.

—சோ. வீரப்ப செட்டியார் (1902)

(நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)


கனவான்களே! என்னிடத்தில் எத்தனையோ பிழைகள் இருப்பினும், ஒரு சிறிது தைரியமும் இருக்கிறதென்று நினைக்கின்றேன். நான் இந்தியாவிலிருந்து மேற்றிசைக்கு ஒரு தூது மொழியுடன் சென்றிருந்தேன். அதை அமெரிக்கர் முன்னும் ஆங்கிலேயர் முன்னும் தைரியமாய் உரைத்தேன். இன்றைய விஷயத்தைத் துவக்குமுன் உங்கள் அனைவருக்கும் சில தைரியமான வசனங்களைச் சொல்ல விரும்புகிறேன். என்னை அதைரியப்படுத்தி, என் காரியவிர்த்தியை எதிர்த்து, கூடுமானல் என்னையும் நசுக்கி ஒழித்துவிட, சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இறைவன் திருவருளால் அவை ஒன்றும் சாயவில்லை. அத்தகைய முயற்சியின் பயன் எப்பொழுதும் அப்படித்தானே முடியும்.

—சுவாமி விவேகாநந்தர் (9–2–1897)

(சென்னை விக்டோரியா மண்டபத்தில்)


நான் ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக ஆறு டைரிகள் எழுதினேன். இப்போது ஒன்று தான் மிஞ்சி இருக்கிறது. டைரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால்தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்கு கிடைக்கவில்லை, திருவள்ளுவர் ஊர் எது என்று இன்னமும் தெரியவில்லை. திரு. வி. க., டாக்டர் வரதராஜுலு போன்றவர்களின் வரலாறு சரியாக கிடைக்கவில்லை.

— அறிஞர் அண்ணா (1 7-10-1967)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/90&oldid=1015932" இலிருந்து மீள்விக்கப்பட்டது