பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சொன்னால் நம்பமாட்டீர்கள்


மளமளவென்று நடக்க ஆரம்பித்தது. காங்கிரசிற்குப் புதிய பலம் ஏற்பட்டது. பல இடங்களில் தலைவர் ம.பொ.சியும் நானும் தாக்கப்பட்டோம். எங்கள் கூட்டங்களில் புகுந்து திராவிடக் கழகத்தினர் கலாட்டா செய்து பார்த்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் சளைக்க வில்லை.

அவர்களும் பதிலடி கொடுத்தார்கள். பட்டுக்கோட்டையில் நானும் திரு.ம.பொ.சி. அவர்களும் பேசிவிட்டுத் திரும்பும்போது இரவு 12 மணி அளவில் ஒரு வெறி பிடித்த கூட்டம் ஊருக்கு வெளியே மறைந்து நின்று எங்களைக் கொல்லக்காத் திருந்தார்கள்.

நாங்கள் வந்த காரை அடித்து நொறுக்கினார்கள். டிரைவர் ரொம்ப தைரியசாலி, காமராஜ் தேர்ந்தெடுத்துக் கொடுத்த டிரைவர் ஏழுமலையல்லவா? அதனால் அடி உதை, வெட்டு, குத்து, இவைகளுக்கு மத்தியில் எங்களைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி தலைவர் ம.பொ.சி.அவர்களும் நானும் எவ்வளவோ தமிழகத்திற்குச் செய்து வந்திருக்கிறோம்-இன்னும் செய்து கொண்ருக்கிறோம்.

தலைவர் ம.பொ.சி.அவர்களைப் பற்றி நான் தனியாக ஒரு நூல் எழுதினால்தான் என்மனதில் இருக்கும் அனைத்தையும் நான் கூற முடியும். ஆனால் சுருக்கமாக ஒரு விஷயத்தை நான் சொல்லவேண்டும். நான் பழகிய வரையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் சிறந்த காந்தீயவாதி-மற்ற எல்லாவற்றையும் விட ஒழுக்க சீலர். -

நான் ராஜாஜி அவர்களுடனும் ம.பொ.சி. அவர்களுடனும் மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன். பலநாட்கள்தொடர்ந்து கூடவே இருந்திருக்கிறேன். நான் அறிந்த வரை தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களில் ராஜாஜியும், ம.பொ.சியும் தெய்வீகப் பிறவிகள் !