182
சொன்னால் நம்பமாட்டீர்கள்
காமராஜ் அவர்களை முறியடிக்க ராஜாஜி அவர்கள் செய்த முயற்சியில், தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து விட்டது.
பின்னர் ராஜாஜி-காமராஜ் இருவரும் ஒன்று சேர்ந்தும்கூட தி.மு.க வைத் தோற்கடிக்க முடியவில்லை.
தேசீய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி-காமராஜ் பகை செய்து விட்டது.
அரசியலில் ராஜாஜி காமராஜ் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களே ஒழிய, தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள்.
ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழக அரசை காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார்.
காமராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார். பேசினார்.
ஆனால் ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார். சொன்னால் நம்பமாட்டீர்கள். யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினார்.