பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டு அல்வா
இரண்டு வடை

1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும், கட்சித் தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்கவும், அவர்களுக்கு உற்சாக மூட்டவும் தமிழ்நாடு முழுவதும் நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சுற்றுப் பயணம் செய்தோம்.

கவிஞர் கண்ணதாசன் பல அபூர்வ ஆற்றல்கள் நிறைந்தவர். சினிமாவிற்குப் பாடல்கள் எழுதி பிரசித்தி பெற்றுவிட்டதால், அவரது கவிதை நயம் பலரால் இன்னும் உணரப்படவில்லை. ஒரு சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளராக இருப்பது அபூர்வம்.

கண்ணதாசன் கூட்டத்தில் பேச ஆரம்பித்தால் சகல நயங்களும் துள்ளி வரும் சங்கீதத்தின் பின்னணியில் ஒரு சுருதி இழையோடுவதுபோல, அவர் பேச்சின் மத்தியில் ஒரு சப்தம் வந்து கொண்டேயிருக்கும்.

தலைவர் காமராஜ் ரஷ்யா சென்று வந்த சமயம். எல்லா ஊர்களிலும் பெரிய வரவேற்பு நடந்தது. நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சிதம்பரத்தில் நடைபெற்ற வவேற்பைப் பார்க்கச் சென்றோம்.

நாங்கள் சென்ற சமயம் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ் நாடு காங்கிரஸ்