இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சின்ன அண்ணாமலை
213
“இதனுள்தான் இருக்கிறது” என்று அடுப்பில் சோறுவெந்து கொண்டிருக்கும் தவலையைக் காட்டினேன்.
“உலை கொதிக்கும் தவலையிலா இருக்கும்?” என்று அதிகாரி கேட்டார்.
அதற்குள் பெண்கள், “சோறு வேகிறது, அதற்குள் நகை எப்படி இருக்க முடியும்” என்று அதிகாரியை ஒட்டி உரசிப் பேசினார்கள். நான் ஒரே அடியாக, “சோற்றுத்தவலையைக் கீழே இறக்கிச் சோதனை போடுங்கள்” என்று சத்தம் போட்டேன்.
அதிகாரியும் வேறு வழியின்றிச் சோற்றுத் தவலையைக் கீழே இறக்கச்சொல்லி சோற்றை கீழே கவிழ்த்தார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அத்தனை நகைகளும் பொலபொலவென்று கொதிக்கும் சோறுடன் சேர்ந்து கொட்டின
அன்றே என் நண்பரின் பெண் மயக்கம் தீர்ந்தது. சோதனை போட வேண்டிய இடங்களில், இனி சோறு கொதித்துக் கொண்டிருக்கும் பானைக் குள்ளும் சோதனை போடவேண்டும் என்ற புதிய விஷயம் ஒன்ற போலீசாருக்கும் புலனாயிற்று.