உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 29 ஆனால் ஆமையாகி விடக்கூடாது. தோகையை விரித்து ஆட் மறுக்கும் மயிலாக இருக்கக் கூடாது. என்னுடன் வா, நடு நாட்டுக்கு. அரச சபையிலே உரிய இடத்தை நான் வாங்கித் தருகிறேன்.விட்டுவிடு, வீண் வேதாந்தத்தை [மதிவாணன் புன்னகை புரிகிறான். அதிலே இலே சாகக் கேலியும் கலந்திருக்கிறது.) காட்சி-13 இடம்: சோமநாதன் மாளிகை - உட்புறம் இருப்: சோமநாதர். நிலைமை: சோமநாதன் தன் நண்பரின் கையை உதறிக் கொண்டு. சோம்: விடு-போகப் போக விபரீதம் வளர்ந்து போகுது -- நேராகவே போய், அந்த மண்டைக் கர்வி மதி வாணனை, மானமிருக்கா, மட்டு மரியாதை இருக்கான்னு கேட்டால்தான் என் மனதிலே உள்ள கொதிப்பு குறையும். [சோமநாதர் கோபமாகக் கிளம்புகிறார்...] காட்சி—14 இடம்: மதிவாணன் மலர்த்தோட்டம் இருப்: மதிவாணன், சோமநாதர், கற்பகம் நிலைமை: சோமநாதர் வருவது கண்ட கற்பகத்தம்மாள், தோட்டம் சென்று மதிவாணனுக்கு ஜாடை காட்ட, மதிவாணன் தண்ணீர் இறைக்கும் வேலையை நிறுத்தி விட்டு வந்து, சோமநாதரை வணக்கம் செய்து வரவேற்கி றான். சோமநாதரின் முகம் கடுங்கோபத்தைக் காட்டுகிறது. கையிலுள்ள தடியைப் பூமியில் குத்தியபடி, சோமநாதர்விறைத் துப் பார்க்கிறார்