பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

எல்லாம் நல்லபடியாகவே கடக்கும், பாருங்கள்!” என்று தேறுதல் சொன்னுர்.

எல்லாம் பகவான் கடாட்சம்தான்!” என்று செருமிஞர் துளசிங்கம்.

அப்போது, தமிழ்ச்சித்தன் அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, நீங்கள் சொல்கிற அந்தக் கடவுளே அவதாரம் எடுத்துவந்து தரிசனம் கொடுத்தால் கூட, என்னுடைய விருப்பத்திற்குத் திருத்தம் கற்பிக்க இயலாது!’ என்று உறுமினுன். பிறகு, சாவதான மாகச் சொன்னுன்: ‘ இதோ பாருங்கள் அப்பா ! திருவாளர் வேதநாயகம் அவர்கள் உயிரோடிருக்கை யில், தம் கைப்பட எனக்கு எழுதிக் கொடுத்திருக்கிற இந்தக் கடிதம் ஒன்று போதும், மகேசுவரியை என் காலடியில் விழச் செய்ய...!’ தாம்பாளம் விழுந்தாற். போன்று, அவன் வெறிகொண்டு சிரிக்கலானுன் !