பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o * or 1. ரதி மன்மதன் விளையாட்டு

மலர்க்கணை பறந்து சென்றது. காளத்தி காத னுக்குப் பெருமை பிடிகொடுக்கவில்லை. குறி பலித்து விட்டதல்லவா ? தாவிப்பிடிக்கும் தொலைவில் கின்று கொண்டிருந்த மஹேஸ்வரியை விழுங்கி விடுபவன் மாதிரி பார்த்தான் அவன். யார் செய்த பூஜாபலனுே, அவளே அவனுல் விழுங்க முடியவில்லை. ஆகவே, அவள் கள்ளச் சிரிப்பை மெள்ள உதிர்க்கலானுள். அடுத்த கணத்தில், அவளுக்குப் புல்லரிப்பு ஏற்பட்டது. பாய்ந்து வந்த அம்பு பட்ட பட்டுமேனியைத் தடவிக் விட்டுக் கொண்டாள். முத்துப் பதித்த பதக்கத்தை மீண்டும் அவளது விரல்கள் வருடின. கானத்தை உண்டது முறுவல், ஏறிட்டு விழித்தாள் மஹேஸ்வரி. போதும், கிறுத்துங்கள் உங்கள் மன்தன் விளை யாட்டை !’ - -

பம்பாய்ப் பீடாவைச் சுவைத்துப் பழக்கப்பட்ட அவனுடைய பற்களுக்கு இடையில் சிரிப்பு அழுக் தியது. மிதந்து வந்த கதம்பமலர்ச் சரத்தின் வாசனை, கெஞ்சில்-மண்ம்பர்ப்பிக் கொண்டிருந்தது. பதுமையை