பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


விரல் அவளது சுருள் அலை படிந்த முடி இழைகளை ஒதுக்கி விட்டது. விளைந்த சிரிப்பில் ஜீவன் விளைந்தது. ‘ம்!--பெருமூச்சுக்குப் பேசத்தான தெரியாது ?

பெற்றவள் பெட் காப்பி கொணர்ந்தாள். படுக்கை விட்டு எழுந்தவள், மறுபடி படுக்கையிலேயே அமர்ந்து கொண்டாள். காப்பியை ஒரே மடக்கில் குடித்து வைத் தாள். படுத்த படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு, வாயைக்கூட கொப்புளிக்காமல் குடிப்பதற்குத்தானே * பெட் காபி என்று பெயர் ?

மஹேஸ்வரி அன்றைய ஆங்கிலத் தினசரியை ஒரு புரட்டு புரட்டினுள். விலாசம் இல்லாமல் அனுப்பப் பட்ட மர்மக் கடிதம் ஒன்றை வைத்துக்கொண்டு போலீஸில் குற்றப் பதிவு செய்திருக்கும் பட்டனத்துப் பைங்கொடியைப் பற்றிய ருசிகரமான தகவல்களை மூச்சுவிடாமல் படித்து முடித்தாள் ; பிறகு, மூச்சு விட்டாள்.

அதே சமயத்தில், உடலில் ஊறிய சிலிர்ப்பை உணர்ந்தாள். அவ்வுணர்வு, எதிரில் கிடந்த டம்பப் பையில் நிலைத்தது. துடித்த கைகளே நீட்டினுள் ; படித்த கடிதத்தைப் பார்வையிட்டாள் மஹேஸ்வரி.

“ அன்புகெழுமிய மகேசுவரி !

என்னை அறிந்தவர்கள் நீங்கள். அது போல, நானும் உங்களை அறிந்தவன். தர்க்க ரீதியான முறையிலேனும் இதை நீங்கள் அங்கீகாரம் செய்வீர்கள் என்பதே என் எண்ணம். மனம் காணும் ஆசைக் கனவுக்கு ஆத்மதரிசனமாக அமையவல்லது வதுவை விழா என்பது என் கருத்து. ஆகவேதான்,