பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


இக்குறிப்புத் துண்டை அவசரம் சேர்த்து எழுத வேண்டியவன் ஆனேன்.

ஒன்று சொல்லவேண்டும். நீங்கள் காளத்திகாதனை மறந்துவிட வேண்டும் !

இயலாதா ? அப்படியென்றால், உங்களையே காளத்தி யிடமிருந்து மறைத்துக் கொள்ளவேண்டும் !

தீவலம் ‘ என்னும் நம்முடைய நாடகத் தின் படுதா உங்கள் இருவரின் சந்திப்புக்கும் படுதா விரிக்கட்டும் ! .

மனம் பேதலிக்கிறதா ? பரவாயில்லை. ஆணுல், பேதைமையை உ ங் க ளு க் கு த் தோழியாக்கிக் கொண்டுவிடாதீர்கள் !

காலம் ஒரு மருத்துவன். காலக்கிரமத்தில் உங்க இள நீங்களே உணர்வீர்கள். அதே அளவில், என்னையும் உங்களால் உணர முடியும். அங்கிலை அண்மை யிலேயே வழி விடுமானல், அதுவே என் பாக்கியம் ஆகும் ! - தங்கள் அன்புள்ள,

தமிழ்ச்சித்தன்.” எரிகின்ற தீபத்தில் எண்ணெய் குறைவாக இருக் கக்கண்டு, சிறுகச் சிறுக எண்ணெய் ஊற்றப்பட்டால் எரியும் திரியில் எண்ணெய்த் திவலைகள் பட்டுப் பட்டுச் சுடர்தெறிக்கும் பாருங்கள். அந்த அழகில் அவளின் இதயதீபத்தில் மேற்படி உறைக் கடிதத்தின்