பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8}

உங்கள் காலடியில் அர்ப்பணிக்கக் காத்திருக்கிறேன் நான். நீங்களோ, அந்தப் பாவிமுன் அப்பாவியாகி விட்டிருக்கிறீர்கள் ஈஸ்வரா !...”

  • நீ இன்னும் சிறுமியாகவே இருக்க ஆசைப்படு கிருயா ?

நான் உலகம் அறிந்தவள் என்பதை என்னுடைய இப்போதையத் துணிவே உங்களுக்குக் காட்ட வில்லையா ? :

காட்டத்தான் செய்கிறது...!”

“ காளத்தி, முதலில் இதைப் படியுங்கள் !” என்று கூறி, மறைத்து வைத்திருந்த அந்த மனவினை மட2ல நீட்டினுள். அழைப்பை எடுத்த அவசரத்தில் விடு பட்டுப்போன தலைப்புப் பொத்தான்கள் இரண்டையும் அழுத்தினுள். அவள் அவனையே வெறிக்க வெறிக்கப்

பார்த்தாள். ஒருவகையான பதட்டமும், பயமும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருந்தன.

& மஹறி ! 

“ பேச நேரமில்லை. என் பேச்சுக்கு மறுத்தீர்களா குல், என் முடிவை இந்தப் பொங்குங்கடல்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டிவரும் ! நடங்கள் என்னுடன்!”என்று ஆணை’பிறப்பித்தாள் மஹேஸ்வரி.

ஐயையோ!...மஹறி ! இப்போது காரிலே நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிருேம்.இந்த இரவிலே ? சொல்லமாட்டாயா, மஹேஸ்வரி ?” என்று கச்சரித்த அவனது கேள்விகள், அப்போதைய நிலையில் அவளு. டைய செவிகளில் விழுந்தால்தானே...?