உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 152 ஜீயர்களின் கொதிப்பு இவைகளால் மாண்டுபோகாத இயக்கம் - பதவியும் பட்டமுமே தேவை யென்பவர் களின் பாசக்கயிற்றிலே யிருந்து விடுபட்ட இயக்கம் சொந்த வாழ்வும் சுயநலமும் பெரிதென்போரின் பேய்ப்பிடியிலிருந்து தப்பிய இயக்கம் - கொள்கைக் காக வாழ்ந்த நாகை மணியை; மாயவரம் நடராசனை, ஆரூர் இராமனை, அழகிரிசாமியை அணைத்திருந்த இயக்கம் நமது இயக்கம், - கோவை முத்தமிழ் மாநாட்டிலே அபாய அறி விப்புச் சங்கம் முழங்கி அதன்பிறகு, ஆளவந்தவர் விழித்துப்பார்த்து, மொழிக்கு வந்த கொடுமைகளைத் தடுத்து விட்டனர். இந்த வெற்றியைக் கொண்டாடிய நேரத்திலேயே தான் நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று. சு ஆம்! அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம்;-அக்ரகாரத்தின் வெற்றி முரசம்; இந்துக் கூட்டத்தாரின் இன்பச் சிந்து-திராவிடத்தின் முன் னாள் பழம்பெருந் தலைவர்கள் தியாகராயர்; டாக்டர் நாயர்; பானகல்; டாக்டர் நடேசன் முதலிய பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்பு வாரி பிரதிநிதித்துவ-கம்யூனல் ஜீ. வோ..-முறை யைக் குழியில் தள்ளிவிட்டு-பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப் பாட்டைத்தான் தோழர்களே! குறிப்பிடு கின்றேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்யூனல் ஜீ. வோ.வுக்கு மாறானதாக இருக் கிறதாம். அதற்காக சமூக நீதியைச் சாய்த்துவிட வேண்டுமாம்! சட்டத்தை இயற்றுபவர்கள் மக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/152&oldid=1703701" இலிருந்து மீள்விக்கப்பட்டது