உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூய நறுந்தொண்டு இன்றைய தினம் நீங்கள் எல்லோருப் பூரிப் போடும், வெற்றிக் களிப்போடும் என்னை மகிழ்ச்சிப் பெருங் கடலில் மூழ்க வைக்கும் பணியில் ஈடுபட்டி ருக்கிறீர்கள். ஆனால் நான் இந்த வெற்றியைச் சுவைத்தும் சுவைக்காமலும் உங்களிடையே பேசிக் கொண்டிருக்கிறேன். L திராவிட முன்னேற்றக் கழகம் என்னை இத் தொகுதிக்கு அனுப்பி "கழகத்தின் சார்பில் காங்கி ரசை எதிர்த்துப் போட்டியிடு" என்று கட்டளையிட் டது. நான் முன்பு உங்களிடையே பேசும்போது குறிப்பிட்டேன். "நான் இதுவரை வெறும் கருணா நிதியாக உங்களிடம் பேசினேன். இப்போது அபேட் சகன் கருணாநிதியாக வந்திருக்கிறேன்" என்று, பேசிப் பத்துப் பதினைந்து தினங்கள் கூட ஆகவில்லை. வெறும் கருணாநிதியாக இருந்து, அபேட்சகன் கருணா நிதியாக மாறிய நான், இப்போது உங்களால் எம்.எல்.ஏ.கருணாநிதியாக ஆக்கப்பட்டிருக்கிறேன். அந்த விதத்தில் இன்றைய தினம் நான் பெற்றி ருக்கிற வெற்றி. குளித்தலைத் தொகுதி மக்களாகிய நீங்கள் அனைவரும் பெற்ற வெற்றியாகும். ஆனால் இந்த வெற்றிக்கான எனது முதல் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் என் தந்தை பெரியார் இராமசாமி அவர்கள்தான். அதனால்தான் எனது வெற்றிச் செய்தியையும் அறிஞர் அண்ணா அவர் களுக்கு அனுப்புவதற்கு முன்பே பெரியாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/20&oldid=1703207" இலிருந்து மீள்விக்கப்பட்டது