உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குறிப்பிட்டதுபோல இந்த வெற்றியை என்னால் முழு தும் அனுபவிக்க முடியவில்லை. எனக்கு முன் பேசிய தோழர் மதுரைமுத்து குறிப்பிட்டார்கள். அறிஞர் அண்ணாவும், நாவலர் நெடுஞ்செழியனும், கருணாநிதி யும் மட்டுமே சட்டசபைக்குச் சென்றாலே போதும்" என்று தான் கருதியதாக ஆனால் அந்த மூவரில் நம தருமை நாவலர் பொதுச் செயலாளர் நெடுஞ்செழி யன் அவர்கள் சட்டசபையில் அமர்ந்திட - தனக்குப் பின்னால் இருக்கும் லட்சோப லட்சம் திராவிட முன் னேற்றக் கழக அணிவகுப்பு வீரர்களுக்கு ஆணையிட நிலையில் - சதியின் முடியாத காரணமாக சுமார் - - 200 வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற இய லாது போயிருக்கிறார்கள். அந்த 200 வோட்டுகளை யும், நாவலரை எதிர்த்து நின்ற காங்கிரசுத் தோழர் சூது செய்து பெற்றார் என்பதையும், "வழக்கு மன்றத் திலே அதற்குப் பரிகாரம் தேடத்தான் வேண்டும்" என்று அது குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் சேலத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் அறி வித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் உணருவீர் கள். இன்றைய தினம் வரை என்னோடு சட்டசபைக்கு 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன் னும் ஓரிரண்டுபேர் வரலாம். வராவிடில் 12 பேர் தான். இதை நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டு கூடச் சொல்ல வேண்டாம். " ஒரு டஜன் " என்று சுரு சுருக்க. மாகச் சொல்லலாம். நீங்கள் சொன்னாலும், சொல் லாவிட்டாலும் பெரியார் அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். 'ஒரு ஒரு டஜன் பேர் சென்றால் போதுமா?' என்று நமது ஐம்பெருந் தலைவர்களை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/22&oldid=1703209" இலிருந்து மீள்விக்கப்பட்டது