உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பஞ்சபாண்டவர்கள் .. 23 என்று அழைத்த அவர்கள், 0 இந்த 12 சட்டசபை உறுப்பினர்களையும் "ஆழ்வார் கள்' என்று நிச்சயமாக அழைக்கவும் செய்யலாம். ஆனால், நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகி றேன். இந்த பன்னிரண்டு பேர்களும் ஆழ்வார் கள் என்றால் நாம் சட்டசபைக்குச் செல்வது நமக்கு, நாமே நாமம் போட்டுக்கொள்ள அல்ல. இந்த நாட் டைக் கெடுத்துவரும் சதிக்கூட்டத்தாரின் நெற்றி யில் நாமம் சாத்தத்தான். - குளித்தலைத் தொகுதிக்கு நான் அபேட்சகனாக நின்று - ஒரு மாத காலமாக உங்கள் ஆதரவுக்கா க்காகச் சுற்றி பல கூட்டங்களில் பேசி - இன்று இருபத் திரண்டாயிரம் வோட்டுகள் பெற்று வெற்றியடைந் திருக்கிறேன். இருந்தாலும் முழுமகிழ்ச்சியடைய நான் தயாராக இல்லை. ஏனெனில் என்னை வெறும் பவர்கள் - நான் சட்டசபைக்குச் செல்லக் கூடாது. என்று கருதுபவர்கள் இங்கு இன்னும் பதினாலாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். ஆகவே இந்தத் தொகுதியில் என் தொண்டு - என்பணி இனிமேல் தான் மிகமிக அதிகம் நடைபெற்றாக வேண்டும். அந்தப் பதினாலா யிரம் பேர்கள் நான் சட்டசபைக்குச் செல்லக்கூடாது: என்று கருதிய காரணத்தால் - காங்கிரசு இந்த நாட்டிலே பல கேடுகளைச் செய்திருந்தும் கூட காங் கிரசு இந்த நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதிகளை அறிஞர்கள் பல்லோர் எடுத்துக்காட்டியுங்கூட- "அந்தக் காங்கிரசு வந்தாலும் வரட்டும்; கருணாநிதி' மட்டும் வரக் கூடாது என்று கருதி காளைமாட்டுப் பெட்டியிலே தங்கள் வோட்டுகளைப் போட்டிருக்கிறார். கள். ஆகவே, அந்த பதினாலாயிரம் பேர்களையும் 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/23&oldid=1703210" இலிருந்து மீள்விக்கப்பட்டது