உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 25 சண்டையோ மல்யுத்தமோ அல்ல; ஜனநாயக ரீதியில் போட்டியிட்டுக் கொண்டோம்; மக்கள் சக்தி - மக்கள் தீர்ப்பு - எனக்கு வெற்றியைத் தந்தது ஆகவே என்னோடு போட்டியிட்டவர்கள், என் விரோதிகள் அல்ல, விரோதிகளாகவும் ஆகமாட்டார்கள்! அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. இன்றைய தினம் நான் ஊர்வலமாக வந்த நேரத்தில் என்னோடு போட்டியிட்ட ராஜகோபால ஐயங்கார் என்ற ஒரு தோழர் எனக்கு முழு மகிழ்ச்சியோடு மாலையணிவித்து வாழ்த்தினார். ஒருவேளை, அவர் கைச்சின்னம் கொண் டிருந்த அபேட்சகர். அதனால்தான் தன் கையால் மாலை சூட்டினார் என்று கருதலாம். அதைப்போலவே மற்ற சின்னங்களைக் கொண்டிருந்த தோழர்களுக்கும் கைகளிருக்கின்றன - கருத்திலே தெளிவு இருக்கிறது. கருணாநிதியிடம் நிறைய அன்பு இருக்கிறது - என்று காட்டிக்கொள்ள மாலையிட்டு மரியா த செய்ய வேண் டாம்; நான் இத்தொகுதியில் மக்களுக்குத் தொண்டு செய்யும்போது தோளோடுதோள் நின்று, உதவி செய்து ஒத்துழைக்கக் கோருகிறேன். க தலைவர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார் கள், என்னைப்பற்றி யார் யாரோ ஏதேதோ பேசினார் கள் என்று தேர்தல் நேரத்தில் அப்படிப் பேசத்தான் வேண்டும். ஏனென்றால் எப்படியாவது தான் தேர்த லில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற ஆசை எல் லோருக்கும் இருக்கத்தான் செய்யும். எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டுமென்பதற்காக எதையா வது பேசாதே' என்ற ஆணைக்குட்பட்டவர்கள் நாம் மட்டுந்தான். அப்படி கண்ணியம் மீறாமல் கட்சி நடத்துபவர்களும் நாம்தான். க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/25&oldid=1703212" இலிருந்து மீள்விக்கப்பட்டது