உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 காங்கிரசு சீர்திருத்தக் கட்சியின் வோட்டுகள் கலந் திருக்கின்றன ; தமிழரசுக் கழகத்தின் வோட்டுகள் கலந்திருக்கின்றன; சோசலிஸ்டுகளின் வோட்டுகள் கலந்திருக்கின்றன. அத்துடன் திராவிடர் கழகத் தின் வோட்டுகளும் கூடக் கலந்து விட்டிருக்கின்றன. அடுத்த தேர்தலிலே இன்று காங்கிரசுக்குக் கிடைத்த வோட்டுகளிருக்கும். - திராவிடர் கழக வோட்டுகள் பிரிந்து - இன்னும் மற்ற மற்றக் கட்சிகளுக்கான வோட்டுகளும் பிரிந்து- காங்கிரசின் வோட்டுகள் மட்டுமே தனித்து நின் றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை அது வென்றுவிட முடியுமென்றா கருதுகிறீர்கள்? சேலத்திலே நமது பொதுச் செயலாளர் அவர் களின் தோல்விக்குக் காரணமாக இருந்தவையே இத்தகைய வோட்டுகள் தானே? திராவிட முன் னேற்றக் கழகத்துக்கு அங்கு, இருபத்தி நாலாயிரம் வோட்டுகள் கிடைக்கும் ; கம்யூனிஸ்டுகளுக்கு ஐயா யிரம் அல்லது ஆறாயிரம் வோட்டுகள் கிடைக்கும்; காங்கிரசுக்கு மிகுதியுள்ள இருபத்தோராயிரம் வோட் டுகள் கிடைக்கும். எனவே, மூவாயிரம் வோட்டுகள் வித்தியாசத்தில் நமது பொதுச் செயலாளர் நிச்சயம் வெற்றி பெறுகிறார் என்று தான் சேலமே சொல்லி யது. ஆனால், என்ன ஆயிற்று? நினைத்தபடி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருபத்தி நாலா யிரம் வோட்டுகள் கிடைக்கத் தான் செய்தன. ஆனால், தேர்தல் தினத்தன்று காலை முதல் வேலை செய்து வந்த கம்யூனிஸ்டுத்தோழர்கள், பனிரண்டு மணிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/33&oldid=1703220" இலிருந்து மீள்விக்கப்பட்டது