32 இருபத்தொன்பதாயிரத்து தொளாயிரம் வோட்டு களில் இரண்டாவது இடம் பெற்றுத் தோற்றிருக் கிறது திராவிட முன்னேற்றக் கழகம். சென்னையிலே தோழ ர் என். சீவரத்தினம் நானூறு வோட்டுகளிலே தோற்றார் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் எண்ணூறு வோட்டுகளில்! - விழுப்புரம் தோழர். சண்முகம் தோல்வி ஏழு நூறு வோட்டுகளில்! ஆம்பூரிலே நமது தோழர் சம்பங்கி நானூறு வோட்டுகளே குறைந்த காரணத்தால் தோற்றிருக் கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம் ? நம்மிடம் பணமில்லை ; கடைசி நேரத்தில் குறுக்கிடும் அத்யாவ சியமான செலவு கூடச் செய்ய முடியாது போய்விடு கிறது. ஆனாலும் ஒன்று ; குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்ல முப்பது படிகள் என்றால், நாம் இருபத் தொன்பது படிகள் வரை சென்று விட்டோம் ஒரு படி தான் பாக்கி! அதையும் தாண்டிவிட நமக்கு உதவும், இந்தத் தேர்தலில் நாம் பெற்றிருக்கும் அனுபவம். - நாம் இந்தத் தேர்தலில் பெற்ற வோட்டுகள் சாதாரணமானவையல்ல. நமது வோட்டுகள் துல் லிய மானவை - தூய்மையானவை WOO திராவிட முன் னேற்றக் கழகத்திற்குப் போடப்பட்டவை ! ஆனால், காங்கிரசு பெற்ற வோட்டுகளிலோ, கம்யூனிஸ்டுகளின் வோட்டுகள் கலந்திருக்கின்றன ;
பக்கம்:சொல்லோவியம்.pdf/32
Appearance