உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாணி முத்தெடுத்தோம் அறிஞர் அண்ணா அவர்கள், " தம்பிகள் உங் களைச் சந்திப்பார்கள் ; அவர்களோடு உங்கள் கருத் துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள் " என்று சொல்லி விட்டு, எங்களை உங்கள் முன்னிலையில் நிறுத்தி விட்டு, அவர்கள் வேறு கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் சொற் பொழிவு ஆற்றிச் சென்ற பிறகும் எங்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்காக நீங்கள் இங்கே அமர்ந் திருக்கிறீர்கள் என்றால், உள்ளபடியே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைட கருத்துக்கள் காள்கைத் திட்டங்கள் - யாரால் எத்தனை முறை திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும், அது மக்கள் மன்றத்தால் வரவேற்கப்படுகிறது. அதற்குப் புதிய உற்சாகம் தரப்படுகிறது, என்பதைத்தான் நீங்கள் அமைதியாக இருந்து இந்தக் கூட்டத்தை வெற்றி கரமாக நடத்தித் வருவதின் மூலமாக எங்களுக்குப் புலனாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்திலே, பதினைந்து பேர்கள் இன்றைய தினம் சட்ட மன்றத்திற்குச் சென்றிருக்கிறோம் என்பதும், அது இந்த நாட்டிலே இருக்கின்ற லட்சோபலட்ச மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது என்பதும்; நாள் தவறினாலும் பாராட்டுக் கூட்டம் தவறுவதில்லை என்பதும் நீங்கள் அறிந்த ஒன்றாகும். நாம் வெற்றி பெற்றவர்களோ, பதினைந்து பேர்கள் தென்னாட்டுக்குப் புறம்பான கொள்கைகளை வைத்திருக்கின்ற காங்கிரசு இயக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/81&oldid=1703267" இலிருந்து மீள்விக்கப்பட்டது