இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறிது தூரத்தில் வரிசையாக இருந்த மரங்களை நோக்கி அது தன் கழுத்தை நீட்டிப் பார்த்தது. பிறகு, “அதோ, அந்த மரங்கள் உனக்குத் தெரிகிறதா? பாலைவனத்தில் எங்கேனும் மரங்கள் இருந்தால், அங்கே நீர் இருக்கும். அங்கே ஒரு கிராமம்கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும், அங்கே மற்ற மிருகங்கள் இருக்கும். நீ அவற்றுடன் விளையாடலாம். வா, போகலாம்” என்றது.