பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103


2. ・・・・・・ போரில்
கொலைநாடு வெஞ்சினவேல் கூத்தன் குறுகார்
மலை நாடு கொண்டபிரான் வந்து.
3. தென்னர், குடமலை நாடறிந்து கொண்ட வேற்கூத்தன்.
4. ............ கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்
கிழிவுகண்டான் தொண்டையர்கோன் ஏறு.
5. ............ தென்னர்
மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக்
குலமன்னர் செல்வமெலாம் கொண்டு.

விக்கிரமசோழன் காலத்தில்

முதற்குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசனாகத் திகழ்ந்தவன் விக்கிரமசோழன். இவ் விக்கிரம சோழனுடைய ஆட்சியின் முற்பகுதியினும் மணவிற்கூத்தன் நிலவியிருந்தான்.

விக்கிரசோழனுலா

விக்கிரம சோழனது அவைக்களப் புலவராய் வீற்றிருந்தவர் ஒட்டக்கூத்தர். இவ்வொட்டக்கூத்தர் விக்கிரமசோழனுலா என்னும் நூலொன்று விக்கிரமசோழன் பேரில் இயற்றியுள்ளார். இவ்வுலாவில் இம்மணவிற் கூத்தனான காலிங்கர் கோனின் வெற்றிகள் பற்றிப் பின்வருமாறு காணப்பெறுகிறது :-

............ வேங்கையினும்
கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும்
ஓடா விரட்டத்தும் ஒட்டத்தும்-நாடா
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோன் ...