42
பிற்கல்லெழுத்துச் செய்திகள்
வியாக்கியான விருத்தி
திருக்கோவில்களில் வியாக்கியான மண்டபங்கள் இருந்தன. அங்குப் பெரும்புலவர்கள் இலக்கணத்தை விளக்கி விரிவுரை யாற்றுவர். இங்ஙனம் இலக்கண விரிவுரை நடாத்துபவர்க்கு ஊதியம் அளித்தற்பொருட்டு நிலம் ஒதுக்கப்பெறுவதுண்டு; இது குறித்து உத்திரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலில் வடபுறத்துச் சுவரில் உள்ள பார்த்திவேந்திர பன்மனுடைய 3-ஆம்ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது.[1] வியாகரன விருத்தியாக (1) பத்ரங்கது வாசுதேவபட்ட சோமாசியார் 3-ஆம் தரம் 480 குழியும், (2) ஓதிமுகில் மாதவபட்டர் தலைதரம் 720 குழியும், (3) துர்பில் நரசிங்க கிரமவித்தன் தலைதரம் 220 குழியும், (4) இவையிற்றுக்கு நீர்பாயும் வாய்க்கால் 35 குழியும் ஆக 1455 குழி நிலம் அளித்தனர் என்று அறியப்படுகிறது.[2]
விஷஹரபோகம்
மக்களின் உடற்பினிை போக்க ஆதுரசாலைகள் பல முற்காலத்து இருந்தன. அங்குச் சல்லியக்கிரியை
- ↑ 41 18 of 1898; S. I. I. III 161.
- ↑ திருவொற்றியூரில் வியாகரணதான வியாக்கியான மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு வியாகரணம் கற்பிப்பார்க்கும், கற்பார்க்கும் ஆக முன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிபந்தம் ஏற்படுத்தப்பெற்றது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பொன் வரி என்று ஒரு வரி வசூலித்து அவ்வியாக்கியான மண்டபத்தைப் பழுது பார்த்தற்கு அளித்ததன், ( 2O1 of 1912 and 11O of 1912; தென்னிந்திய கோயில் சாஸனங்கள் எண் 5 18, 5.10.)