பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

தத்தா நமரே காண்' என்ற மிலாடுடையார் படிவம். இவர் நின்ற பத்மத்தொடுங்கூடச் செய்த பீடம், பதிற்று விரல் நீளம் எண் விரல் அகலம் எண் விரல் உயர முடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

ருத்ராக்ஷம் ஒன்றிற் கட்டின பொன் ஏழு மஞ்சாடி உட்பட ருத்ராக்ஷம் ஒன்று ; நிறை அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி ; விலை காசு ஒன்று.

முடிப்புரை

இந்நாளில் திருக்கோயில்களில் கோயில் அலுவல்களை மேற்பார்வை செய்யும் இறை பணியாளர் (Executive Officer) போன்று முன்னாளில் ஸ்ரீ காரியம் ஆராய்கின் றவர் என்ற அலுவலர் இருந்து கோயில் அலுவல்களைச் செவ்வனே நடத்தினர். முன்ளனாலும் பின்னாளிலும் இவ்வலுவலில் பலர் இருந்திருப்பினும் பொய்கை நாடு கிழவன் போன்று சிலைமேல் எழுத்தில் நின்றவர் சிலரே. பொய்கை நாடு கிழவன்போன்று இந்நாள் இறைபணியாளர் தொண்டாற்றிச் சைவர் நெஞ்சில் நிலை பெறுவாராகுக.