பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஉ ' சோழவமிசசரித்திரச்சுருக்கம். வருகிறான் என்று கேள்வியுற்று, தன் சேனாநாயகனான கருணாகாத் தொண்டைமானை(யும் தன்மகன் விக்கிரமசோழனை)யும் அனுப்பிக் கலிங் கத்தையும் வென்று தன்னாட்டுடன் சேர்த்துக்கொண்டான்... இந்தாடு இவன் கைவசப்பட்டதென்பதில் ஐயமேயில்லை. இவன் காலத்துத்தமிழ்ச் சாஸனம் ஒன்று சிம்மாசலத்தில் இருக்கிறது. கலிங்கம் ஜயித்த விஷ யத்தைப் புகழ்ந்து தான் கலிங்கத்துப்பரணி பாடப்பட்டது. பலவகைபானும் பெருமையுற்று வாழ்ந்து வருசாளில், இவ்வாசன் தன் 14வது ஆண்டில், திரிபுவனச் சக்ரவர்த்திகள்' என்னும் பட்டப் பெயர் தரித்தான். இது முதல் இராச்சியத்துக்கு வேண்டும் நன்மை களைத் தேடமுயன்றான். அதற்கு அங்குரார்ப்பணம் போல முதன் முதல் “சுங்கங்களைத்தவிர்' த்தான். இதனாலே ஜனங்கள் இவனை மிகவும் வாழ்த்தி "சுங்கந்தவிர்த்தசோழ" னென்று அழைக்க ஆரம்பிக் தார்கள். பின்பு இராச்சிய முழுதும், புதிதாக அளப்பித்து, ஆறிலொரு கடமையாக வரியேற்படுத்தினான். குடிகட்கு உழுதொழிலுக் குபயோ கப்படும்படி பல ஏரிகளையுங் கட்டி, காடுகளை வெட்டிப் பட்டணங்களை யுண்டாக்கிக் கொடுத்தான். ஊர்கட்கமகாக, பல விஷ்ணுவாலயங்களும் சிவாலயங்களும் கட்டுவித்து, தன் தாய்வழியார் வழக்கத்தின்படியே, தானும் சிதம்பரத்தில், பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான். இத் தொழிலால் இவன் "போம்பலம் பொன்வேய்ந்த சோழன்" என்னும் பெயர் பெற் (.. ....... திறைக ளொழியசின் றவரு முளர்கொலென் றருளுபொழுதிலே-க. ப. காளிக்குக்கூளி கூறியது, பா, 26 கடவதந்திறைகொடடையவர்தாசர் கழல்வணங்கினர்களிவருடன் வடகலிங்கர்பதியவனிரண்டுவிசை வருகிலன்றிறைகொடெனலுமே.ஷை பா. 27. எளியனென்றிடினும் வலியகுன்றாணம் இடியநம்படைஞர்கடிது சென் மளியலம்புமுதமலைகள் கொண்டணையின் அவனையுங்சொணர்மினெனறுமேஷ பா, 29,