பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். (நீள வந்த மனிதன் ஒருவன்மேல் தற்செயலாகப்பட்டதனால் இறந்தான். இவ்விஷயத்திலும் மேற்கூறிய தண்டனையே விதிக்கப்பட்டது. மற்றக்குற்றங்களுக்குத் தண்டனை, சிறை தளை சங்கிலிபுகுதல் என்பன; “இவன் சாவிலும் போகிலும் சிறைதளை சங்கிலி புகிலும் இவ்வனைவோம் முன்புநின்றோமே சந்திராதித்தவல் நெயட்டுவதாய் புணை ப்பட்டோம்" ' என்பதனால் இதனையறிக. ஓர் அதிகாரி தன்னாட்டுவரி முதலான பணங்களைத் தண்டல் செய்து தானேசெலவழித்து கொண்டுவிட்டான்; இச்செய்தியையறிந்து அரசாங்கத்தார் அவனைச்சிறையிலிடும்படி, அவனுக்குப்பின் நியமிக்கப் பட்ட அதிகாரிக்குக் கட்டளை அனுப்பினார்கள். சிறையில் வைக்கப் பட்டவன் ஒருநாள் தப்பி ஓடிவிட்டான். அவனால் வரவேண்டிய தொகைக்கு அவன் வீடு நிலம் முதலிய ஸ்திதிகளை விற்று ஒழுங்கு பண்ண அவ்வதிகாரிக்கு உத்திரவு வந்தது- என்று திருப்பராய்த் துறைச் சாஸனம் ஒன்று கூறுகிறது. கோயில்களில் நெய்விளக்கெரிப்போமாக என்று ஒப்புக்கொண்டு பொெைபற்றவர்கள் எரிக்காமல் 'இக்தர்மம் முட்டின பொழுது" இவர்கள் “நிசதி ஐங்கழஞ்சு பொன் தர்ம்மாசனத்தே மன்ற ஒட்டிக்குடு' ப்பாராகத் தண்டம் விதிக்கப்படுவார்கள். இதுபோன்ற பொன் தண்ட முடைய குற்றங்களெல்லாம், ஒப்புக்கொண்ட விஷயங்கள் செய்யாதொழி வன என்று ஏற்படுகிறது. இராச்சியத்தை ஒழுங்காக அளந்தாலன்றி இவ்வளவு விளை நில மிருக்கிறதென்பதும் அவற்றினின்றும் இவ்வ. வு வரிப்பணம் வாவேண் டியதென்பதும் நிச்சயப்படா. ஆதலால், சோழர்காலத்து நிலவளவு வெகுதிட்டமாகச் செய்து வரப்பட்டது. முதல் ராஜராஜன் காலத்து ஒரு தடவையும், குலோத்துங்கன் காலத்து ஒரு தடவையும் இராச்சிய த்துள்ள நில முழுதும் அளக்கப்பட்டது. “உடையார் சுங்கந்தவிர்த் தருளின குலோததுங்க சோழதேவற்கு யாண்டு கஈ-வது அளக்கக்

  • Ep An. Rep. for 1901-2; No. 64 of 1900. t S. 1, 1, Vol. III p, 28.