பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135 பெண்மைப் பொருளை யாண்மை பேச வுரிய பெரும்பொருளை நுண்மைப் பொருளை நுணங்கறிவின் நூலோர் உருகி நுனித்துணரும் உண்மைப் பொருளை யுறுபொருளை யுணரு மறிவைப் பெறாதேயான் திண்மைப் பொருளை யுலகிலுள்ள சிறுமைப் பொருளைப் பற்றுவனே. பற்றப் படுநற் பெருந்திருவைப் பற்றும் வழியை யறியாதே குற்றப் படுகர்க் குழியிடையே

குறிக்கும் பொருளை மறந்தயர்ந்து சுற்றப் படுபல் துயர்த்தொகையைச் சுற்றி மயங்கி வாழ்ந்திருந்தேன் முற்றப் பெறுபே ரின்பநலன் முதல்வ னருளிற் பெறுவேனே. அருளே நிறைவாய் அறிவுருவாய் அமைந்தாய் அமல! அடியேன்பால் மருளே மிகுமால் உலகமயல் வழிந்தே பெருகி யோடிவரும் இருளே மிகுமிப் பிறவியிடை யினியும் பிறவாப் பேறருளிப் பொருளே அருள்வாய் பொருளாகிப் பொருளை யுணர்த்தும் புதுப்பொருளே! இப்பாடல்களைப் பாடிய பிறகு அவன் மயங்கிக் கீழே வீழ்ந்தான். அனைவரும் நெருங்கினர்; அவன் இறைவன் அடி நிழலடந்ததை அறிந்தனர்.