உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

________________

37 களைப்பற்றி ஆராயவேண்டா. இப்பொழுது நாம் இருக் கும் நிலையென்ன ? இனி நமக்கு வரும் நிலையென்ன? இவற்றை ஆராய்வோம். நண்பர்களே, நான் சொல் வதை நம்புவீர்களாயின், இப்பொழுது நம் நாட்டில் உண்மையில் அரசன் ஒருவன் இல்லையென்று கூறு வேன். நம் அரசர், சோழர் குடித்தோன்றல், திருமாவள வர் எங்கிருக்கின்றார் ? என்னவாயினர்? அவர் நிலையினை நாம் அறியோம். கொடுங்கோலனே யாயினும், சென்ற இரண்டு வருஷ காலமாக இங்கு இருந்து அரசு செலுத்தி யிருந்த கொடுங்கோலன், இன்று நம் கிளர்ச்சியைக் கண்டு அஞ்சி யொளித்தான். குடிகள் மனம் கோணா வண் ணம் அரசு புரிய அறியாதவர் கதி இதுவேயாகும் என் பதைப் பிரத்தியக்ஷமாக அறிந்தோம். நாம் இனிச் செய்தற்குரியதென்ன? நம் இளவரசர் உயிரோடு இவ் வமயத்தே இன்ன இடத்தே இருக்கின்றார் என் பது நம்மால் அறியக் கூடுமாயின், நாம் என்ன செய்வோம் என்பதில் எவர்க்கும் அபிப்பிராய பேத மில்லை. நாம் ஒரு கணப் பொழுதேனும் அரசின்றி யிருந்தோம் என்ற பழி பூணலாகாது. இப்பொழுது நம் நாட்டுக்கு ஒரு தலைவன் ஏற்படல் வேண்டும். மனித முயற்சி • நாம் என்னென்ன செய்யலாமோ, அவை யெல்லாம் செய்து பார்த்தோம். எனினும், நம் இளவரசரைக் காண்டற் கியலவில்லை. சிறைக் களத் திருந்து எடுத்த பிணக் குவியல்களினிடையே நம் அரசர் பிரான் உடல் போன்ற குறிகளையுடைய தொன்றும் அகப்படவில்லை. அவர் எங்கேனும் அயல் நாடுகளிற் சென்று மறைந்திருப்பினும், இருக்கலாம். நாம் இனி