பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

________________

வந்து சேர்ந்தனர். பிடர்த்தலைப் பெரியாரும் இதற்கு முன்பாக அங்கு வந்து சேர்ந்து, அரசனை யெதிர்கொள் வாரில் முதல்வராய் முன் வந்து நின்றார். நகரெங்கும் நன்கு அலங்கரிக்கப் பெற்றிருந்தது. மாந்தரனைவரும் புதிய ஆடைகள் புனைந்து, தம் மன்னர் பெருமானைக் காண விரைந்து வந்தனர். இளைஞனே யாயி னும், பிறந்தகுடிப் பெருமையை வளர்த்தற்குரிய குணங்க ளெல்லாம் பொருந்தியிருந்த திருமாவளவன், தெய்வச் செயலால் தன்னைத் தேடிக் கொணர்ந்த அரசுவாவின் மீது பொன் மணையிட்டமர்ந்து, நகர் வலஞ் செய்து, அரண் மனைக்குட் புகுந்தான். அன்றே நன்னாளெனக்கொண்டு, பெரியோர் பலர் குழுமியிருந்து, அவனுக்கு மறு முறை யும் முடி சூட்டி, நாட்டு மக்களுக்கெல்லாம் பெரு. மகிழ்ச்சி விளைவித்தனர். முடி சூட்டு மங்கலம் நிகழ்ந்த பின்னர், ஆத்தான மண்டபம் அடைந்து, தெய்வங்களைத் தொழுது, பெரி யோர் ஆசி பெற்ற வளவர் பிரான், அங்குக் கூடியிருந்தோ ரைப் பார்த்துப் பின் வருமாறு பேசினன்: அன்புடைய நல்லோர்களே, வாழ்வும் தாழ்வும் உலகில் எவர்க்கும் உள்ளனவே. இந்த இரண்டாண்டுக ளாக நும் போன்ற நல்லோர் பலர் சிறைக் களத்தே அகப்பட்டு அடைந்த இன்னல்களை யான் சிறிதளவு அறிவேன். இந்த அரசவுரிமையிலே ஆசை கொண்ட சிலர் எனக்கிழைத்த தீங்குகள் மிகச் சிலவே; நுமக்கு இழைத்த கொடுமைகள் மிகப் பல. கடுமையான அர சிறைகள் விதித்ததும், கொடுக்க வியலா தவரைத் தண் டித்ததும், யான் அறிந்தேன். உண்மை பேசுவார்க்குப்