பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யின் விளக்கப்பட்டிருப்பதை அறிஞர் காணலாம். இவை போன்ற இன்னும் பல புத்தகங்கள் வெளி வருவதற்கு வேண்டிய அரும்பொருள்கள் நம் தமிழ் நாட்டுப் பண் டைச் செய்யுள் நூல்களிலே உண்டு என்பது அறிஞர் கருத்தாம். நம் பண்டைப் பெருமையை நாமும் அறிந்து பிற நாட்டவரும் அறியச் செய்தற்பொருட்டே இக் காலத்தில் அயல் மொழிகளில் இத்தகைய நூல்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிகின்றோம். சென்ற வாண்டிலே சங்க காலத்துப் பாண்டியர் ஓரைவர் வரலாற்றை ஆங்கில கலாசாலை மாணவரும் பிறரும் பயின்றின் புறுமாறு யான் பழம்பொருள்களோடு புதுப்பொருள்கள் சிலவற்றைச் சேர்த்து எழுதி வெளி யிட்டேன். அவ்வண்ணமே சோழ மன்னருள் ஓரைவர் வரலாற்றை விளக்க இந்நூற்றொகை எழுந்தது. இதன் கண் சோழ மன்னருள் மிக்க கீர்த்தி படைத்தவனாகிய சோழன் கரிகாற் பெருவளத்தான் வரலாறு முதற் பாக மாகிய இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுளது. பின்னர்க் கிள்ளிவளவன், நலங்கிள்ளி, கோச்செங்கட் சோழன், கோப்பெருஞ் சோழன் என்ற சோழர் வரலாறுகள் இத் தொகுதியின் இரண்டாம் மூன்றாம் பாகங்களில் கூறப் பட்டுள. இம்மன்னர்களின் வரலாறுகளை ஊகித்துணரச் சங்கச் செய்யுட்களே பெரிதும் உதவியாயின. கரிகாற் பெருவளத்தான் வரலாற்றிலே வரும் சில செய்திகள் இந்நூற்றொகையில் புதுமைப் பொருள் சேர்த்துப் புனைந்துரை வகையால் நன்கு விரித்து எழு தப்பட்டுள. பழமொழியிலுள்ள,