பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்சால் சம வெளிமேல்சிறு தடுப்பும், வரை வின்றிக் கார்காலமும் இளவேனிலும் நாரைஎனச் செலுமே. ஈர்வாள்நிகர் நெடும்புல் நில ஈடில்குதி ரைகள் பேர்வான்புகழ்க்கு எட்டாஉயர் பெருமைதனைப் பெறுமே. “சீர்மேவிய விலங்கின்இனம் சிம்புள்எனப் பறக்கும்’ நேர்.இவ்வுரை பரிமேய்ப்பவர் நிமிர்ந்தேமகிழ்ந் துரைப்பார். ஆர்வந்தரும் குளம்போசைகள் அடர்புல்வெளி ஆர்க்கும்.

வேடிக்கையாய் உடன்போக்கினில் விறலாண்மையைக் காட்ட ஆடிக்களத் தன்பைத்தரும் அரும்பாவைய ரோடே ஒடிக்கொளும் கடுங்காற்றென ஊரும்பரி மாக்கள், சாடிப்புரண் டோடும் மலை ஒடையென முழங்கும். கூடிக்கிளர் குளம்போசையைச் செவியில்கொளும் முன்னம் பாடிக்கொளும் குதிரைமலைக் கோமான்கதை கூடப் பீடின்னிசை பொன்னாட்டுயர் பெருமைதனைக் காட்டா.

என்ஆருயிர் மேலாம்பரி மந்தைதனைக் காப்பேன்; இன்காவலும் உரிமையுடன் இருக்கத்தலை ஈவேன். வன்புல்நில முதுமக்களே, காண்பேன்.புது நாள்கள் என்நாடுயர் பேராண்மையை எய்தி.மகிழ் வுறுவேன். வன்புல்நில வெளியில் மகிழ் குதிரைக்குளம் போசை என்கேளிரின் நெஞ்சங்களில் இன்பூட்டிட விழைவேன்.

F 3