இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
81
மிகாயில் ஸெவத்லோவ் உருசியக் கூட்டரசு
(1903-1964)
அடிவானம்
வானம், அன்னை மண்ணொடும் கூட வந்தது கீழ்என்றார், வனப்புற அதனின் விளைவாய் அடிவான் பிறந்தது என்றாரே.
வானும் மண்ணும் ஈன்ற மகனைக் காணத் துடித்திட்டேன் நானும் ஒடினேன் அவனும் ஓடினான் எட்டாத் தொலைவானான்.
போக்கிலி தன்னைப் பிடித்தல் கடினம் என்றுணர்ந் தேன்.எனினும் பார்க்கப் போகிறான் தனக்கு நிகராய்ப் பக்கத் தெனைஒருநாள்.
இவ்வாறு அவன்தன் இடம்விட்டு இடத்தில் நழுவும் இயல்புணர்ந்தேன்: ஏறும் முகட்டை விட்டு மற்றோர் முகடாய் விரட்டுகிறேன்.
200