பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2

சிறிய உருவம் படைத்தவர். ஆனால் திறமைமிக்க கணவனுக்கு எந்த விதத்திலும் புத்திக் கூர்மையில் குறைந்தவர் அல்ல. ' மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி

பெரிது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப அமைந்தவர் ஜவஹரின் தாய். தந்தையிடம் நேரு கொண்டது பயமும் பக்தியும். தாயிடம் அவருக்குக் கிடைத்தது பாசமும், அன்பும்,

இந்தச் சூழ்நிலையில் முயன்று போராடி முன்னுக்கு வரவேண்டிய அவசியம் நேருவுக்கு எப்படி ஏற்பட்டது ? ஏன் ஏற்பட்டது, என்பதை விளக்குவதே இந்தச் சிறு நூலின் நோக்கம்.

இதில் சில பகுதிகளை ஏற்கெனவே என் கணவர் அமரர் திரு. சக்திதாசன் சுப்ரமணியன் எழுதி நவசக்தி'யில் வெளியிட்டார். ஆனால் ஏதோ தடங்கலால் அந்நூல் முற்று பெறவில்லை. எனவே உலகம் போற்றும் உத்தமர் ஜவஹரின் போராட்டப் பகுதியை அதாவது 1947 வரை உள்ள பகுதியை எழுத முயன்று உள்ளேன்.

அறிஞர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.

திருமதி. ஜ. சக்திதாசன் சுப்ரமணியன்