பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

செளந்தர கோகிலம்



அடைந்து, "யார் அங்கே படுத்திருப்பது? என்னுடைய படுக்கை யறையில் என்னுடைய உத்தரவில்லாமல் வந்த திருடனை நான் நிரம்பவும் கடுமையாகத் தண்டிக்கப் போகிறேன், கைகளுக்கும் உடம்புக்கும் விலங்குபோட்டு உடனே போலிஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்' என்று குதூகலமாகப் பேசிக்கொண்டே ஆவலோடு கட்டிலில் பாய்ந்து, மிகுந்த ஆசையோடு அவரை ஆலிங்கனம் செய்து, தனது கைகளால் அவரது முகத்தைத் திருப்பி இரண்டு மூன்று முறை முத்தங் கொடுக்க, அவரது முகம் விகாரப்பட்டிருந்ததும், அவர் ஏதோ பெருத்த துயரத்தில் ஆழ்ந்து கிடந்ததும் அவளுக்கு நன்றாக விளங்கின. அவள் உடனே திடுக்கிட்டு மிகுந்த அச்சங்கொண்டு, "என்ன இது! ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? விளை யாட்டுக்காக நீங்கள் இப்படி எனக்குத் தெரியாமல் வந்து படுத்தி ருக்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்! நீங்கள் இங்கே எப்போது வந்தீர்கள்? உங்களுடைய உடம்பில் ஏதோனும் அசெளக்கியம் ஏற்பட்டதா? அல்லது, வேறே ஏதாவது துன்பம் சம்பவித்ததா? ஏன் இப்படி வேதனைப் படுகிறீர்கள்? உடம்பு நெருப்புத் தணல்போலச் சுடுகிறதே! கடும் ஜூரமாக இருக் கிறதே! என்ன சங்கதி? நிஜத்தை ஒளிக்காமல் சொல்லுங்கள்" என்று நயமாக வற்புறுத்திக் கூறினாள்.