பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 செளந்தர கோகிலம்

இருந்தபின் விஷயங்களைத் தெரிந்துகொண்டு புறப்பட்டு வந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்களாம். அம்மாள் அங்கிருந்து புறப்பட்டு கோகிலா வேறு சொந்தக்காரர் எவர் களுடைய வீட்டுக்காவது போயிருப்பாளோ வென்று போய்த் தேடிப் பார்த்துவிட்டு எங்கேயும் அவளைக் காணாமல் அலுத்துப்போய் இப்போதுதான் வந்து என்னிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நீங்களும் வந்தீர்கள். ஒரு நாளும் இல்லாத புதுமையாக அக்காள் தனியாகப் போனதையும், அவளைத் தேடிக்கொண்டு அம்மாள் போனதையும், பிறகு இருவரும் வராமல் இருந்ததையும் அறிய, நான் நிரம்பவும் பயந்து நடுங்கிவிட்டேன். என்ன செய்வதென்பதே தெரியாமல் போய்விட்டது. இந்த ஆபத்துச் சமயத்தில் நம்முடைய சொந்த ஜனங்களையாவது வரவழைப்போம் என்று நினைத்து உடனே உங்கள் எல்லோருக்கும் செய்தி சொல்லியனுப்பி, இந்த இரவு வேளையில், நீங்கள் இவ்வளவு தூரம் வரும்படியான கஷ்டத்தைக் கொடுத்துவிட்டேன்’ என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட உறவினர் எல்லோரும் கோகிலாம்பாளைப்பற்றி மிகுந்த கவலையும் விசனமும் அடைந்து பதறலாயினர். உடனே சதாசிவ முதலியார், “என்ன ஆச்சரியம் இது! பொன்னுரங்க முதலியார் நிரம்பவும் பெரிய மனிதர் ஆகிவிட்டார் போலிருக்கிறதே! இவர்களுக்கு ஏதாவது சங்கதி சொல்ல வேண்டுமென்றால், அவரே நேரில் வந்து பெரிய அம்மா ளிடத்தில் அதைச் சொல்லிவிட்டுப் போக எவ்வளவு நேரம் பிடிக்கப் போகிறது; ஒரு மணி நேரங்கூடப் பிடிக்காதே! அவருடைய பொழுது என்ன அவ்வளவு கிராக்கியாகி விட்டதா வென்ன. இந்த வீட்டில் யாரும் ஆண் பிள்ளைகள் இல்லை யென்பது அவருக்குத் தெரியாதா? அதுவுமில்லாமல், இவ்விடத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததையும், இடையில் நேரிட்ட விஷயங் களையும் அவர் அறியாரா? இந்தச் சமயத்தில் தானா, இந்த வீட்டுப் பெண் பிள்ளைகள் அந்தச் சீமானைத் தேடிக் கொண்டு அவருடைய சமூகத்துக்குப் போக வேண்டும். இதென்ன பணத் திமிரா அல்லது உத்தியோக மமதையா என்பது தெரிய வில்லையே! என்றார்.