பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 81

நான் உன் மேல் ஆதியில் வைத்த ஆழ்ந்த பிரியம் என் கட்டையோடுதான் போகும்’ என்று நிரம்பவும் மனதுருகி இறைஞ்சிக் கூறினார். -

கோகிலாம்பாள் தன்னிடம் அவ்வளவு அபாரமான பிரியமும் பிரேமையும் கொண்டுள்ள மனிதரது மனதை முறித்து விடத்தக்க சொற்களைத் தான் வெளியிடவேண்டுமே என்ற நினைவினால் முற்றிலும் கலங்கி வருந்தித் தத்தளித்து மிருதுவாக வும் இளக்கமாகவும் பேசத்தொடங்கி, தாங்கள் என்னை வற்புறுத்திப் பேசச் சொல்லி தங்களுடைய நல்ல மனசைக் கெடுத்துக்கொள்ள எத்தனிக்கிறீர்கள். தாங்கள் இன்று எனக்குச் செய்த உதவியின் பெருமையென்ன! தாங்கள் என் விஷயத்தில் வைத்துள்ள பிரியமென்ன! மதிப்பென்ன! அவைகளுக்கு ஒத்தபடி நடந்துகொள்ளக்கூடாத நிலைமையில் நான் இருக்கிறேனே என்பதைப் பற்றித்தான் என் மனம் அப்போது முதல் துடித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஆண் மக்கள் யாருமில்லையென்பது தங்களுக்குத் தெரிந்த விஷயம். எங்கள் தகப்பனார் ஏராளமான சொத்துக்களைத் தேடிவைத்துவிட்டு, காலத்திற்குமுன் இறந்து போய்விட்டார்கள். அவ்வளவு பெரிய சொத்தை வைத்துக்கொண்டு நிர்வகிக்க எங்களால் ஆகவில்லை. ஆகையால் எனக்கும் என் தங்கைக்கும் ஏற்படும் புருஷர்களு டைய தயவையே நாங்கள் நாடவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். பெரிய பணக்காரர்வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்பட்டால், அவர்கள் எங்களுடைய வீட்டில் வந்திருந்து எங்கள் சொத்தை நிர்வகிக்க இணங்கமாட்டார்கள் என்று நினைத்து நான் சாதாரணமான குடும்பத்திலுள்ள ஒருவரைக் கட்டிக்கொள்வதென்ற தீர்மானத்திற்கு என் தாயார் வந்தார்கள். எனக்கு அது சம்மதமாயிருந்தது. ஆனால், என் தங்கை அதற்கு இணங்கவில்லை. அவள் தக்க பெரிய இடத்தில் தன்னை வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் தெய்வம் உங்கள் இருவரையும் எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது. என்னுடைய எண்ணப்படி எனக்கு ஒர் இடம் ஏற்பட்டது. என்னை இந்த இடத்தில் கொடுப்பதென்ற தீர்மானத்தின்மேல்,